தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

நெமிலி பாலா பீடத்தில் ஸ்ரீவித்யாபூஜை

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்ரீவித்யா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:10 am IST

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்ரீவித்யா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்காக பாலா முன் சிறப்பு பூஜை செய்து அவர்களுக்கு பேனாவை வழங்கி ஆசீர்வாதம் செய்வது பீடாதிபதி எழில்மணியின் வழக்கம். ஆண்டுதோறும் ஸ்ரீவித்யாபூஜை நாளன்று இந்த நிகழ்வு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பீட நிர்வாகி மோகன் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். பீடாதிபதி எழில்மணி, மாணவ, மாணவியரை ஆசீர்வசித்து பேனாக்களை வழங்கினார். 
இந்த நிகழ்வில் விவேகானந்தா பள்ளி முதல்வர் இன்பராஜசேகரன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.