தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நெமிலி பாலா பீடத்தில் ஸ்ரீவித்யாபூஜை

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்ரீவித்யா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:10 am IST

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்ரீவித்யா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்காக பாலா முன் சிறப்பு பூஜை செய்து அவர்களுக்கு பேனாவை வழங்கி ஆசீர்வாதம் செய்வது பீடாதிபதி எழில்மணியின் வழக்கம். ஆண்டுதோறும் ஸ்ரீவித்யாபூஜை நாளன்று இந்த நிகழ்வு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பீட நிர்வாகி மோகன் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். பீடாதிபதி எழில்மணி, மாணவ, மாணவியரை ஆசீர்வசித்து பேனாக்களை வழங்கினார். 
இந்த நிகழ்வில் விவேகானந்தா பள்ளி முதல்வர் இன்பராஜசேகரன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.