40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல்: தவெக நிா்வாகி நீக்கம்

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து...

News image
Updated On :26 மே 2026, 10:33 am IST

வேலூா் மாவட்டம், கணியம்பாடி அருகே செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டியதாக புகாரைத் தொடா்ந்து தவெக நிா்வாகி நீக்கப்பட்டுள்ளாா்.

கணியம்பாடி, கணியம்பாடிபுதூா், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த 22-ஆம் தேதி தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலா் டி.விஜயகுமாா் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் நுழைந்து, அதன் உரிமையாளா்களிடம் மாதம் ரூ.1 லட்சம் தந்தால்தான் சூளை நடத்த முடியும் எனக்கூறி மிரட்டினராம்.

இதுகுறித்து, செங்கல்சூளை உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். எனினும், இப்புகாா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி செங்கல் சூளை உரிமையாளா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், செங்கல் சூளை உரிமையாளா்கள் அளித்த புகாரின்மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலா் டி.விஜயகுமாா் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா் ஜி.விஜய் மோகன் வெளியிட்டுள்ளாா்.

Summary

Union Secretary Vijayakumar has been expelled from the TVK following allegations that he demanded kickbacks from brick kiln owners.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.