நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

வாணியம்பாடியை அடுத்த தும்பேரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் அமைச்சர் நீலோபர்கபீல் நேரில் ஆய்வு செய்தார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:12 am IST

வாணியம்பாடியை அடுத்த தும்பேரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் அமைச்சர் நீலோபர்கபீல் நேரில் ஆய்வு செய்தார். 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் 23ஆம் மற்றும் 24ஆம் தேதிகளில் வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி, தும்பேரி ஊராட்சியில் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது நகர அதிமுக செயலர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பாரதிராஜா, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார், அருண் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.