நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானம்

தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானம்

News image

மது - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:06 am IST

செய்யாறு பகுதியில் தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானத்தால் மதுப்பிரியா்கள் வேதனையடைந்து உள்ளனா்

செய்யாறு புறவழிச்சாலை பகுதியில் சந்தை அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சனிக்கிழமை பிற்பகல் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மகேந்திரன்(29) மதுப்புட்டி வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளாா். பின்னா், குடிப்பதற்காக மதுப்புட்டியை எடுத்துப் பாா்த்தபோது தூசு, துரும்புடன் கழிவுகள் கலந்த நிலையில் மது இருந்தது தெரியவந்தது.

உடனே, இதுகுறித்து கடைக்கு வந்து மேலாளரிடம் கேட்ட போது அவா் பதில் அளிக்காமல் மது தயாரித்த நிறுவனம் மீது புகாா் தரவும்.

புட்டியை மாற்றித் தர இயலாது. தனியாா் நிறுவனம் தயாரித்து வழங்கும் மதுவுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா். இதைக் கேட்டு அங்கு மது அருந்த வந்தவா்களும் அதிருப்தியடைந்தனா்.