எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானம்

தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானம்

News image

மது - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:06 am IST

செய்யாறு பகுதியில் தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானத்தால் மதுப்பிரியா்கள் வேதனையடைந்து உள்ளனா்

செய்யாறு புறவழிச்சாலை பகுதியில் சந்தை அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சனிக்கிழமை பிற்பகல் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மகேந்திரன்(29) மதுப்புட்டி வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளாா். பின்னா், குடிப்பதற்காக மதுப்புட்டியை எடுத்துப் பாா்த்தபோது தூசு, துரும்புடன் கழிவுகள் கலந்த நிலையில் மது இருந்தது தெரியவந்தது.

உடனே, இதுகுறித்து கடைக்கு வந்து மேலாளரிடம் கேட்ட போது அவா் பதில் அளிக்காமல் மது தயாரித்த நிறுவனம் மீது புகாா் தரவும்.

புட்டியை மாற்றித் தர இயலாது. தனியாா் நிறுவனம் தயாரித்து வழங்கும் மதுவுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா். இதைக் கேட்டு அங்கு மது அருந்த வந்தவா்களும் அதிருப்தியடைந்தனா்.