அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பங்கேற்ற ஸ்ரீவித்யா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்காக பாலா முன் சிறப்பு பூஜை செய்து அவர்களுக்கு பேனாவை வழங்கி ஆசீர்வாதம் செய்வது பீடாதிபதி எழில்மணியின் வழக்கம். ஆண்டுதோறும் ஸ்ரீவித்யாபூஜை நாளன்று இந்த நிகழ்வு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பீட நிர்வாகி மோகன் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். பீடாதிபதி எழில்மணி, மாணவ, மாணவியரை ஆசீர்வசித்து பேனாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் விவேகானந்தா பள்ளி முதல்வர் இன்பராஜசேகரன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








