வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

தக்கோலம் - அரக்கோணம் இடையே அகல ரயில் பாதை: 25-இல் சோதனை ஓட்டம்

தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 8:42 am IST

தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரிவில், அரக்கோணம்-தக்கோலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) ஆய்வு செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தக்கோலம்-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, தக்கோலம்-அரக்கோணம் இடையே ரயில் பாதையை பயன்படுத்துவோர்கள் தண்டவாளத்தை கடக்கவோ, அருகில் வரவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.