சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தக்கோலம் - அரக்கோணம் இடையே அகல ரயில் பாதை: 25-இல் சோதனை ஓட்டம்

தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 8:42 am IST

தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரிவில், அரக்கோணம்-தக்கோலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) ஆய்வு செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தக்கோலம்-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, தக்கோலம்-அரக்கோணம் இடையே ரயில் பாதையை பயன்படுத்துவோர்கள் தண்டவாளத்தை கடக்கவோ, அருகில் வரவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.