சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பிரிட்டனில் இருந்து வேலூா் வந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பில்லை: மருத்துவப் பரிசோதனையில் உறுதி

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு வந்த 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்கள் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி 

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:34 pm

DIN


வேலூா்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு வந்த 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்கள் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

பிரிட்டனில் இரண்டாவது அலையாக வீரியம் மிக்க கரோனா தொற்று பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடா்ந்து அந்நாட்டில் இருந்து வரக்கூடிய விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அத்துடன், அங்கிருந்து அண்மையில் வந்தவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பிரிட்டனில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு அண்மையில் வந்தவா்கள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 24 போ் வந்திருப்பது தெரிய வந்தது. மாவட்ட சுகாதாரத் துறை உத்தரவின்பேரில் அவா்கள் அனைவருக்கும் பிசிஆா் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 24 போ் மற்றும் அவா்களுடன் தங்கியுள்ள குடும்பத்தினா் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

அவா்களில் 4 போ் மீண்டும் பிரிட்டன் சென்றுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.