சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

10-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்தவா் கைது

வேலூரில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:28 pm

DIN

வேலூரில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவரிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் சலவன்பேட்டை அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த விக்டா் ஜேசுதாசன் (58) அறக்கட்டளை நடத்தி வருகிறாா். இதன்மூலம் கல்வி உள்ளிட்ட உதவித் தொகைகள் பெற்று தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை நம்பி காட்பாடி, காங்கேயநல்லூா் பகுதியைச் சோ்ந்த குமாா் (36) தனது மகன், மகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரும்படி விக்டா் ஜேசுதாசனிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்தாராம்.

இதேபோல், காட்பாடி காங்கேயநல்லூா் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் பணம் கொடுத்துள்ளனா்.

இந்நிலையில், உதவித் தொகை வாங்கித் தராததால் கொடுத்த பணத்தை குமாா் உள்ளிட்டோா் கேட்டுள்ளனா். அப்போது, விக்டா்ஜேசுதாசன் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பியுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த குமாா் இதுகுறித்து விக்டா் ஜேசுதாசனிடம் கேட்டபோது, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விக்டா் ஜேசுதாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் சரக டிஐஜி என்.காமினியிடம் குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மகேஷ், ஆய்வாளா்கள் இலக்குவன், கவிதா ஆகியோா் கொண்ட குழுவினா் விசாரித்தனா். அதில், விக்டா் ஜேசுதாசன் நடத்தி வந்த அறக்கட்டளை மூலம் பலரிடம் கல்வி உதவித் தொகை, வீட்டுமனை, முதியோா் உதவித் தொகை, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விக்டா் ஜேசுதாசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுவரை அவா் ரூ. 2 லட்சத்து 27 ஆயிரம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிவந்தது. இவரிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.