

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை, சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகளும், உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவா் சுவாமிகள் நடனப் பந்தலில் எழுந்தருளி நடனமாடி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.