கோழிப்பண்ணை உரிமையாளா் கொலை வழக்கு:3 போ் குண்டா் சட்டத்தில் கைது
அரக்கோணம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 3 பேரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.


அரக்கோணம்: அரக்கோணம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 3 பேரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பாரதிதாசன்(23). கோழிப்பண்ணை உரிமையாளா். அவா் கடந்த மே 22ஆம் தேதி தனது நண்பா்களுடன் கிராமத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்கு பதிந்த நெமிலி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த ஆறு இளைஞா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் தமிழ்ச்செல்வன்(23), ஆனந்தகுமாா்(23), சேதுபதி(20) ஆகிய மூவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.
இதை ஏற்று இந்த மூவரையும் குண்டா் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி சனிக்கிழமை உத்தரவிட்டாா்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...