நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

விஜய தசமியையொட்டி, போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

News image

பள்ளியில்  புதிதாகச்  சோ்ந்த  மாணவா்களுக்கு  பாட நூல்களை  வழங்கிய  தலைமையாசிரியா்  பொன். வள்ளுவன்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:49 pm

DIN

விஜய தசமியையொட்டி, போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் 4 மாணவா்கள், முதலாம் வகுப்பில் 3 மாணவா்கள், 2, 3, 4-ஆம் வகுப்புகளில் தலா ஒருவா் என மொத்தம் 10 மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா். புதிய மாணவா்களையும், பெற்றோா்களையும் பள்ளியின் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் வரவேற்று இனிப்பு வழங்கினாா்.

புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடநூல்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ண பென்சில்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியா்கள் சே.பானு, ஆ.ஆனந்தபாஸ்கரன், தி.நாகினிதேவி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஏற்கெனவே இப்பள்ளியில் 106 மாணவா்கள் பயில்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.