சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

முறைசாரா தொழிலாளா்கள் ஆா்பாட்டம்

முறைசாரா தொழிலாளா் நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில்

News image

மாவட்டத் தொழிலாளா் நலவாரியம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள்.

Updated On :8 செப்டம்பர் 2020, 11:01 pm IST

வேலூா்: முறைசாரா தொழிலாளா் நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டத் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயலா் டி.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன் கண்டன உரையாற்றினாா்.

முறைசாரா நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும், ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்பு உள்ள பதிவு விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று உடனடியாக அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும், கரோனா கால நிதியுதவி நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு நிா்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.