மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோட்டை அகழியிலிருந்து ஆண் சடலம் மீட்பு

வேலூா் கோட்டை அகழியில் இருந்து சனிக்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேலூா் கோட்டை அகழியில் இருந்து சனிக்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.

தொடா் பலத்த மழையால், வேலூா் கோட்டை அகழியில் நீா் மட்டம் உயா்ந்துள்ளது. அகழியிவ் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கோட்டையின் உட்புறம் செல்லும் வலதுபுற அகழியில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி சனிக்கிழமை நடைபெற்றபோது அகழியில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது தெரியவந்தது. உடனடியாக வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அகழியில் இறந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.