வேலூர் அருகே ஆந்திர எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. எனினும், இந்த நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இருந்து மேற்கு, வடமேற்கு பகுதியில் 50 கி.மீ தொலைவில் ஆந்திர எல்லையோரத்தில் உள்ள பலமநேர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 3.14 மணிக்கு லேசனா நிலஅதிர்வு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், 3.5 ரிக்டர் நிலஅதிர்வு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலஅதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கர்நாடகம்: தொடர்ந்து 2-வது நாளாக நிலநடுக்கம்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, குடியாத்தம், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே லேசனா நிலஅதிர்வு உணரப்பட்டு வருகிறது. அதன்படி, குடியாத்தம் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலஅதிர்வால் ஒரு வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.
இதன்தொடர்ச்சியாக வேலூருக்கு அருகே ஆந்திர மாநில எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டிருப்பது வேலூர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த நிலஅதிர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிலஅதிர்வு ஆய்வுக்குழு விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

