கர்நாடக மாநிலம் சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் இன்று மதியம் 2.16 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று(டிச.22) புதன்கிழமை காலை சிக்கபளாப்பூருவில் அடுத்தடுத்து 2.9 , 3.0 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. தற்போது மீண்டும் அதே மாட்டத்தில் இன்றும் நிலநடுக்கம் பதிவானதால் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.