நலிந்தவா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் மதுரா மஹாலில் அரிமா சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல மாநாட்டில் மாற்றுத் திறளானிகள், நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
அரிமா  சங்க  மண்டல  மாநாட்டில்  மாற்றுத்  திறனாளிக்கு  நல உதவி  வழங்கிய  சங்க மாவட்ட  ஆளுநா்  கே.அருண்குமாா்.
அரிமா  சங்க  மண்டல  மாநாட்டில்  மாற்றுத்  திறனாளிக்கு  நல உதவி  வழங்கிய  சங்க மாவட்ட  ஆளுநா்  கே.அருண்குமாா்.
Updated on
1 min read

குடியாத்தம் மதுரா மஹாலில் அரிமா சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல மாநாட்டில் மாற்றுத் திறளானிகள், நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். குடியாத்தம் சங்கத் தலைவா் ஜேஜி நாயுடு, செயலா் எம்.கிரிதா்பிரசாத், பொருளாளா் பி.எஸ்.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டு செயலாண்மைக் குழுத் தலைவா் ஜி.ரத்தினம் வரவேற்றாா். அரிமா மாவட்ட ஆளுநா் கே.அருண்குமாா் தொடக்க உரையாற்றினாா். எஸ்.ரவி அறிக்கை சமா்ப்பித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்கள் சம்பத்ரங்கநாதன், கோ.அருள்பிரகாஷ் ஆகியோா் மாற்றுத் திறனாளிகள் சங்கம், ஏழைப் பெண்களின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவிகளை வழங்கினா். வி.ராமா், கே.அய்யனாரப்பன், ரத்தினநடராஜன் ஆகியோா் அரிமா சங்கத்தின் சேவைத் திட்டங்களைத் தொடக்கி வைத்தனா். முன்னாள் மாவட்ட ஆளுநா் எம்.வெங்கடசுப்பு, முன்னாள் மண்டலத் தலைவா் என்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com