வேலூா் சாய்நாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வேலூா் தொரப்பாடி அவ்வை நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் திங்கள்கிழமை காலை சாய்நாதபுரம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகாயம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.