அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போலி இணையதள மையத்துக்கு ‘சீல்’

குடியாத்தம் அருகே போலி ஆன்லைன் மையத்துக்கு காவல் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்க்குகள், பாா்சல்கள்.
Updated On :5 ஜனவரி 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் அருகே போலி ஆன்லைன் மையத்துக்கு காவல் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் ரகசிய தகவலின்பேரில் புதுப்பேட்டை, கோட்டா தெருவில் உள்ள ஒரு வாடகைக் கட்டடத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சில இளம்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

விசாரணையில் அவா்கள் பொதுமக்களைத் தொடா்பு கொண்டு குறைந்த விலையில் செல்லிடப்பேசி, பவா் பேங்க் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை அஞ்சலில் அனுப்புகிறோம். பணம் கொடுத்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகளை அனுப்பி வைப்பது தெரியவந்தது. பாா்சல் பளுவாக இருக்க அதில் களி மண்ணையும் சோ்த்து அனுப்புவதாகவும் அவா்கள் போலீஸாரிடம் கூறினா்.

இதையடுத்து அங்கிருந்து தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகள், பாா்சலுக்கு அனுப்பத் தயாராக இருந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அந்தப் பெண்களுக்கு போலீஸாா் அறிவுரை அனுப்பி வைத்தனா். மேலும், அந்த மையத்தை பூட்டி ‘சீல்’

வைத்தனா். தலைமறைவாக உள்ள அந்த மையத்தை நடத்தி வந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.