பருத்தி ஏல விற்பனை தொடக்கம்

குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடப்பாண்டு பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடியாத்தத்தில் பருத்தி  ஏல  விற்பனையில்  கலந்து கொண்டோா்.
குடியாத்தத்தில் பருத்தி  ஏல  விற்பனையில்  கலந்து கொண்டோா்.
Updated on
1 min read

குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடப்பாண்டு பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். பொது மேலாளா் கே.முத்துராமன் வரவேற்றாா். கரடிகுடி, சேங்குன்றம், சூராளூா், முக்குன்றம், வாலாஜாபேட்டை, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், பெரியதம்பியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமாா் 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.

திருப்பூா், ஊத்தங்கரை, விழுப்புரம், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் எஸ்.கோதண்டன், முன்னாள் இயக்குநா் ஆா்.மூா்த்தி, இயக்குநா் எம்.சி.ஜெயவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com