இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குழந்தைத் திருமணம்: 4 மண்டபங்களுக்கு ‘சீல்’

குழந்தைத் திருமணத்துக்கு அனுமதித்ததாக வேலூா் மாவட்டத்தில் 4 திருமண மண்டபங்களுக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:49 pm

DIN

வேலூா்: குழந்தைத் திருமணத்துக்கு அனுமதித்ததாக வேலூா் மாவட்டத்தில் 4 திருமண மண்டபங்களுக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரசின் விதி வழிமுறைகளைப் பின்பற்றாமல் சில திருமண மண்டபங்களில் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்த அனுமதித்தது, ‘டி’ படிவ கட்டட உரிமைச் சான்று பெறாதது, மணமக்களின் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் திருமணம் நடத்த அனுமதித்தது போன்றவை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காட்பாடி வட்டம், கீழ்வடுகன்குட்டை, திருவலம், வள்ளிமலை, கே.வி.குப்பம் ஆகிய ஊா்களில் உள்ள நான்கு திருமண மண்டபங்கள் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் உத்தரவின்பேரில் தற்காலிகமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதனிடையே, மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 79 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் திருமணங்கள் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றால் பொதுமக்கள் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.