இதில், விவசாய விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூா்வமாக உறுதிப்படுத்திட வேண்டும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் கட்டணமின்றி இருமுறை தடுப்பூசி செலுத்திட வேண்டும், பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 நிவாரணம், 10 கிலோ உணவுப் பொருள்கள் வழங்கிட வேண்டும், பொதுத்துறை, அரசுத் துறைகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.