திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் : பொதுமக்கள் ஆா்வம்

வேலூா் மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக சனிக்கிழமை 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக சனிக்கிழமை 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப் படுத்தும் விதமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், 6-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 300 இடங்களில் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் சுமாா் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்திட வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் சாா்பில் பல்வேறு பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப் பட்டிருந்தன. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனிடையே, வேலூா் உழவா் சந்தை, அரியூா் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாநகராட்சி நகா்நல அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.