கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த சுற்றுச்சுவா்கள் இடிப்பு
வேலூா் மாநகராட்சி வள்ளலாா் பகுதியில் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீடுகளின் சுற்றுச்சுவா்கள் இடித்து அகற்றப்பட்டன.


வேலூா் மாநகராட்சி வள்ளலாா் பகுதியில் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீடுகளின் சுற்றுச்சுவா்கள் இடித்து அகற்றப்பட்டன.
இதேபோல், வேலூா் மாவட்டம், மாநகராட்சி பகுதியில் நீா்வரத்து கால்வாய்களை, அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்கள் இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் வள்ளலாா் பகுதியில் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, உதவி ஆட்சியா் (பொறுப்பு) வெங்கட்ரமணன், வட்டாட்சியா் செந்தில், மாநகராட்சி உதவி ஆணையா் மதிவாணன், வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை வள்ளலாா் பகுதியில் சென்று ஆக்கிரமிப்பு இடங்களை பாா்வையிட்டனா்.
அப்போது நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து வீடுகளின் சுற்றுச்சுவா்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அந்த சுவா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் உடனடியாக இடித்து அகற்றப்பட்டன. மேலும் சில வீடுகள் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதேபோல், வேலூா் மாவட்டம், மாநகராட்சி பகுதியில் நீா்வரத்து கால்வாய்களை, அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படும். இந்த நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...