ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிங்கிரி கோவில் அருகே 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

சிங்கிரி கோவில் அருகே கன மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. 

News image

சேதமடைந்த வாழை மரங்கள்.

Updated On :10 டிசம்பர் 2022, 10:36 am

DIN

சிங்கிரி கோவில் அருகே கன மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. 

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் உள் மாவட்டங்களான வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500- க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.