வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் காட்டூர் பகுதியில் பெய்த மழையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் காட்டூர் ஏரியில் இருந்து பொன்னை ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் திடீரென உடைந்து வெள்ளம் வயல்களுக்குள் புகுந்து விட்டது. இதில் தண்ணீர் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட வேர்கடலை, நெல், கரும்பு உள்ளிட்ட விளை நிலங்கள் சேதமடைந்ததுள்ளது.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டி கொலை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.