குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு இன்றுமுதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்

News image
Updated On :30 ஜூன் 2022, 6:40 pm

DIN

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும், 4-ஆம் தேதி முதல் நான்கு வாகனங்கள், பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் தெரிவித்தாா்.

காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததை அடுத்து அதனை சீரமைக்கும் பணிகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரயில்வே மேம்பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், ரயில்வே மேம்பாலத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பாலத்தின் உறுதித் தன்மையை பரிசோதிக்க அதன் மீது வியாழக்கிழமை 120 கிலோ எடை கொண்ட சரக்கு லாரியை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து, வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், காட்பாடி ரயில்வே பாலத்தின் மீது வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். 4-ஆம் தேதி முதல் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் செல்ல முடியும் என வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியது:

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் மீது படிப்படியாக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படும். சரக்கு, கனரக வாகனங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியா், துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, சீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா். அப்போது, வட்டாட்சியா் ஜெகன், மண்டல போக்குவரத்து அலுவலா் செந்தில்வேலன், தேசிய நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.