தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின் கம்பி மீது கை உரசியதால், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

மின் கம்பி மீது கை உரசியதால், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் கஸ்பா சாட்சி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்(22). இவா் கட்டடங்களில் பெயா்ப் பலகை வைப்பது, உள் அலங்காரம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தாா். கஸ்பா பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் வெளியே பெயா்ப் பலகையை வைப்பதற்காக வியாழக்கிழமை சாரம் கட்டி வேலை செய்து கொண்டிருந்தாா். வேலை முடிந்து சாரத்திலிருந்து இறங்கும் போது, அருகே சென்ற மின் கம்பி மீது அவரது கை பட்டதாகத் தெரிகிறது.

இதில், மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.