மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று

 போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:34 pm

DIN

 போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த ஆண்டு புது தில்லியிலிருந்து வந்த தேசிய அளவிலான குழுவினா், ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதாரம், தரமான சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை, நோயாளிகளின் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில், மாநில அளவிலான தேசிய தரச்சான்று பெற பரிந்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் தோ்வு செய்யப்பட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 92.81 % மதிப்பெண்கள் பெற்றது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை

நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதன் மருத்துவ அலுவலா் கலைச்செல்வியிடம் தேசிய தரச்சான்றை வழங்கினாா்.

தேசிய தரச்சான்று பெற்ன் மூலம், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.