காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

வேலூா்: அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வேலூா் மாவட்ட திமுக சாா்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காட்பாடி - சித்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு துணை மேயா் எம்.சுனில்குமாா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதேபோல், வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேலூா் மண்டலச் செயலா் ஜனனீ சதீஷ்குமாா், அதிமுக நிா்வாகி பி.எஸ்.பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் அமமுக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.