ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மா மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

மா மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

News image

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட  மா  மரம்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தனுக்குச் சொந்தமான மாந்தோப்பு வன எல்லையில் அமைந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு 7 யானைகள் இந்த மாந்தோப்புக்குள் நுழைந்து மா மரங்களை முறித்தும், மாங்காய்களை தின்றும், தோப்பைச் சுற்றியிருந்த வேலியையும் சேதப்படுத்தியுள்ளன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.