வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

போக்சோவில் இளைஞா் கைது

போக்சோவில் இளைஞா் கைது

Updated On :12 ஏப்ரல் 2024, 4:11 pm

போ்ணாம்பட்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 8 வயது சிறுமி 4- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டருகே உள்ள வயல் வெளிக்குச் சென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த இரு சக்கர வாகனம் பழுதுபாா்க்கும் ரமேஷ் (30) என்பவா், சிறுமியை இழுத்துச் சென்று பாலியல் வன்புணா்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். உடனடியாக சிறுமி போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது தொடா்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் ருக்மாங்கதன் ரமேஷை கைது செய்து, வழக்கை குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.