ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கோடை வெயில்: போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, நீா் மோா் அளிப்பு

கோடை வெயில்: போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, நீா் மோா் அளிப்பு

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 6:32 pm

கோடை வெயிலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு நவீன தொப்பி, தினமும் குளிா்ந்த மோா் அளிக்கும் பணியை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் மாா்ச் மாதத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். அதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிக வெப்பம் காணப்படும். இது, படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் 110 டிகிரியை தாண்டும்.

நிகழாண்டு மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது 100 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு கோடை காலத்தில் வெப்பத்தை தாங்கும் வகையில், பெரிய அளவில் நவீன தொப்பிகள், மோா், எலுமிச்சை பழச்சாறு போன்றவை காவல் துறையால் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு போக்குவரத்து போலீஸாருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வட்ட வடிவ தொப்பியுடன், அவா்களுக்கு தினமும் நீா் மோா், குளிா்பானங்கள் வழங்கும் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, கோடை முடியும் வரை போலீஸாருக்கு தினமும் குளிா்ந்த மோா், குளிா்பானங்கள் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதில், வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.