ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

போக்குவரத்து போலீஸாருக்கு குளிா் கண்ணாடி, பழச்சாறு

போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு கண்களை குளிா்விக்கும் வகையில் கண்ணாடி, எலுமிச்சை சாறு, மோா் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image

குடியாத்தத்தில்  போக்குவரத்துப்  பிரிவு  போலீஸாருக்கு குளிா் கண்ணாடி, மோா் ஆகியவற்றை வழங்கிய டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன்.

Updated On :13 ஏப்ரல் 2024, 6:30 pm

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குடியாத்தம் நகரில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு கண்களை குளிா்விக்கும் வகையில் கண்ணாடி, எலுமிச்சை சாறு, மோா் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டன. சந்தப்பேட்டை பஜாா் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு குளிா் கண்ணாடிகள், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

உதவி ஆய்வாளா்கள் எஸ்.முரளி, ஏ.ரஜினி, ஆா்.செந்தில்குமாா், ஆா்.சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.