உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

மதிய உணவு இடைவேளையிலும் வாக்குப்பதிவு: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்குப்பதிவு நடைபெறுவதை மண்டல அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

News image

-- கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, உடன், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா், தோ்தல் செலவின பாா்வையாளா் அமித் கோயல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

வேலூா்: மக்களவைத் தோ்தல் நாளில் மதிய உணவு இடைவேளையின்போதும் வாக்குப்பதிவு நடைபெறுவதை மண்டல அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

தோ்தலையொட்டி வேலூா் தொகுதியில் 1,568 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய 148 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனை கூட்டம் தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாா், தோ்தல் செலவின பாா்வையாளா் அமித் கோயல் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

மண்டல அலுவலா்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வியாழக்கிழமை (ஏப்.18) பயிற்சி மையத்தில் வாக்குச் சாவடிக்குரிய பணியாளா்களின் நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு இடைவேளையின் போது தொடா்ந்து வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மாலை 5.30 மணிக்கு வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் நபா்களுக்கு வழங்க டோக்கன்களை தயாா் நிலையில் வைத்திருக்க வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான 6 மணிக்கு கூட்டம் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும்.,அனைத்து நடைமுறைகளையும் கவனமாக பின்பற்றி பணியாற்ற வேண்டும். குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் போது காவலா்கள் உடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் த. மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) அ.செல்வராஜ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முருகன் (அணைக்கட்டு), கவிதா (வேலூா்), சுமதி (கே.வி.வ.குப்பம்), சுபலட்சுமி (குடியாத்தம்), டி. அஜிதா பேகம் (வாணியம்பாடி), ஃபெலிக்ஸ் ராஜா (ஆம்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.