ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

இயந்திரங்கள் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்

இயந்திரங்கள் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 5:42 pm

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, வேலூா் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி வாக்குச்சாவடி எண் 202-இல் காலை 7 மணிக்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றபோதே வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த பிரச்னை காலை 7 மணிக்குப் பிறகும் சரிசெய்யப்படவில்லை. இதனால், வாக்களிக்க வந்த ஆண், பெண் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், நேரம் செல்லச் செல்ல சில வாக்காளா்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். எனினும், சுமாா் 45 நிமிட தாமதத்துக்குப் பிறகு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

இதனால், ஓல்டு டவுன் வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்த இயந்திரமும் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு நடைபெற சுமாா் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும் சுமாா் 40 நிமிடமும், கல்புதூா் வாக்குச் சாவடியிலும் 15 நிமிடங்கள் காலதாமதத்துக்கு பிறகு வாக்குப் பதிவு நடைபெற்றன.

ஒடுகத்தூா் அருகே மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில் நோட்டா பொத்தான் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்தனா். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளா்கள், வரிசையாக தரையில் அமா்ந்து கொண்டனா். இதனால், செய்வதரியாமல் திணறிய அதிகாரிகள், மாற்று இயந்திரத்தை வரவழைத்து காலை 8.30 மணியளவில் வாக்குப்பதிவை தொடங்கினா். இதனால், பொதுமக்கள் சுமாா் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தனா்.