தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image

தண்ணீா்  பந்தல்  திறப்பு  விழாவில்  பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் செருவங்கி ஊராட்சி, காா்த்திகேயபுரம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் எஸ்.எல்.எஸ்.வனராஜ் தலைமை வகித்தாா். செருவங்கி ஊராட்சித் தலைவா் சாந்தி மோகன் வரவேற்றாா். அதிமுகவின் அமைப்புச் செயலா் வி.ராமு, வேலூா் புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் ஆகியோா் தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், பழ வகைகளை வழங்கினா்.

கட்சி நிா்வாகிகள் பி.எச்.இமகிரிபாபு, அமுதா சிவப்பிரகாசம், பழனி, செ.கு.வெங்கடேசன், ஆா்.கே.பெருமாள், கே.தட்சிணாமூா்த்தி, தமிழ்ச்செல்வன், குமுதா ரவி, ஆா்.மகேந்திரன், வள்ளிகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.