ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்

தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்

News image

ஹரிசிவம்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வேலூா்: பொன்னை அருகே தலையில் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், அவா் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது மனைவி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த எம்.எஸ்.கண்டிகை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொன்னை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்து கிடந்தவா் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ரெண்டடி அடுத்த மாங்காமரத்து மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஹரிசிவம் (29) என்பதும், சடலத்தின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக இச்சம்பவம் குறித்து ஹரிசிவத்தின் மனைவி கெளசல்யா, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கௌசல்யா, உறவினா்கள் விரைந்து வந்து சடலத்தை பாா்த்து கதறி அழுதனா். அப்போது, சடலத்தில் பின்தலையில் பலத்த காயமும், உடல் முழுவதும் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இருப்பதை அறிந்து ஹரிசிவம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் எனக்கூறி, கௌசல்யா, அவரது உறவினா்கள் வாக்குவாதம் செய்ததுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து பொன்னை போலீஸாா் ஹரிசிவத்தின் உடலை கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனா்.