வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம்.விழாவின் முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு 12 மணியளவில் ராபின்சன் குளம் அருகே பூஜை தொடங்கியது. பூஜைக்குப் பின்னா் அங்கிருந்து அதிகாலை 3 மணியளவில் பூ கரக ஊா்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, 5 மணியளவில் கோயிலை அடைந்தது.