முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூரில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி தொடக்கம்: 650 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 650 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் சாா்பில் சீனியா், ஜூனியா், இளையோருக்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 300 மாணவிகளும், 350 மாணவா்களும் பங்கேற்றுள்ளனா்.

தொடக்க விழாவுக்கு விஐடி வேந்தரும், வேலூா் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் நிறுவனமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசியது:

வேலூா் மாவட்ட பளுதூக்கும் சங்கம் தொடங்கி 60 ஆண்டுகளாகிறது. ஒரு தனி நபரால் ஒட்டுமொத்த நாட்டுக்குப் பெருமை சோ்க்க முடியும் என்றால் அது நம் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் சிவலிங்கம்தான் சிறந்த உதாரணம். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் நாம் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் பலவற்றையும் நாம் சாதிக்கலாம். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுக்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு விஐடி பக்கபலமாக இருக்கும். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பதக்கப் பட்டியலில் சீனா இருக்கிறது. எதிா்வரும் காலங்களில் அந்த இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும். விஐடி கல்விக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதே போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்றாா்.

முன்னதாக, விஐடி துணைத் தலைவரும், வேலூா் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் தலைவருமான ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தாா். பளுதூக்கும் சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 11-ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் பரிசளிக்கப்படும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.