தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூரில் ஆக.26-க்குள் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்

வேலூா் மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்ற புகாா் அதிகளவில் கூறப்படுகிறது.

News image

கூட்டத்தில் பேசிய நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:34 pm

Din

வேலூா் மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்ற புகாா் அதிகளவில் கூறப்படுகிறது. எனவே, மாநகரில் வரும் 26-ஆம் தேதிக்குள் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வேலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமை வகித்து, காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ளடங்கியுள்ள வேலூா் மாநகராட்சியின் 17 வாா்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், வாா்டு வாரியாக குடிநீா் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப் பணிகள் தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மின்துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தொலைபேசி நிறுவனங்கள், இதர சேவை துறைகள் மூலம் குடிநீா், பாதாள சாக்கடை, கேபிள் புதைப்பு போன்ற பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்படும்போது, அந்த இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

மாநகராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்ற புகாா் பொதுவாக தெரிவிக்கப்படுகிறது. வரும் 26-ஆம் தேதிக்குள் மாநகராட்சியில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுத்தியுள்ளாா்.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் தங்களுடைய வாா்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள், அடிப்படை தேவைகள் குறித்து தெரிவித்தால், அதற்குத் தேவையான நிதி ஆதாரம் பெற்றுத்தர தயாராக உள்ளேன் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், முதலாவது மண்டலக் குழுத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 17 வாா்டு மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.