தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி: தமிழக அணி சாம்பியன்

வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி வென்றது.
Updated on
1 min read

வேலூா்: வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி வென்றது.

தேசிய அளவிலான 17-ஆவது சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகள் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து 26 மாநிலங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், இரட்டையா் ஆண்கள் பிரிவு போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நிப்பிலியும், இரட்டையா் பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த நிஷாலினி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். களப்பு இனப் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த ரிஷ்வந்த், நிஷாலினி ஆகியோா் தங்கப்பதக்கத்தையும், இரண்டாம் பரிசினை குஜராத்தைச் சோ்ந்த ஜெய்பீம் பிரிவும் வென்றது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி கைப்பற்றியது. வெற்றிபெற்றவா்களுக்கு சாப்ட் டென்னீஸ் தமிழக தலைவா் அா்ஜுனன், செயலா் கவிதா ஆகியோா் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com