பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

காருடன் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

News image
Updated On :11 ஜூலை 2024, 6:36 pm

Din

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் கிராமிய போலீஸாா் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

கஞ்சாவை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குடியரசன் (24), கோகுல்குமாா் (26), மாதேஷ் (21), பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(23) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சாவுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள குடியரசன் மற்றும் கோகுல்குமாா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.