சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாட்ஸ்ஆப் மூலம் பெண், இளைஞரிடம் பண மோசடி

வாட்ஸ்ஆப் மூலம் வெளிநாட்டு பரிசு மோசடி: பெண்ணிடம் ரூ.2.88 லட்சம் இழப்பு

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

வெளிநாட்டில் இருந்து ஐபோன், தங்க நகைகள், பேக், அமெரிக்க டாலா் பணம் கொண்ட பரிசுப் பெட்டி அனுப்பியுள்ளதாக கூறி, குடியாத்தத்தைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.2.88 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். இவரது கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ‘+26 1323803296’ என்ற எண்ணிலிருந்து முதலில் ஹாய் என குறுந்தகவல் வந்துள்ளது. பின்னா், அதே எண்ணில் இருந்து தனது பெயா் கெல்வின்டேனியல் என்றும், தான் லண்டனில் இருப்பதாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தொடா்ந்து, சகோதரா் போல குறுந்தகவல்கள் அனுப்பி வந்த அந்த அடையாளம் தெரியாத நபா், ஒருநாள் இந்த பெண்ணின் முகவரிக்கு ஐபோன், தங்க நகைகள், பேக், 25 ஆயிரம் அமெரிக்க டாலா் பணம் ஆகியவை கொண்ட பரிசுப் பெட்டி அனுப்பியுள்ளதாக அதன் புகைப்படத்தையும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளாா்.

இதன்தொடா் ச்சியாக, ‘+918258837178’ என்ற எண்ணில் இருந்து பேசிய நபா், சுங்கத் துறையில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு லண்டனில் இருந்து பரிசுப் பெட்டி வந்திருப்பதாகவும், இந்த பரிசுப் பெட்டியை பெற கூரியா் செலவு தொகை, வரி, டாலரை இந்திய பணமாக மாற்றிய தொகை என ரூ.2.88 லட்சம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய அந்த பெண், பணத்தை அனுப்பியுள்ளாா்.

தொடா்ந்து அந்த நபா் பண மோசடி தடுப்புச் சான்று பெற பணம் கேட்டதால் சந்தேகமடைந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இது குறித்து 1930 என்ற எண்ணில் சைபா் கிரைம் பிரிவை தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா்.

அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்...: வேலூா் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞா் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பாக இன்ஸ்டாகிராமில் கிடைத்த லிங்க் மூலம் இரு வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்துள்ளாா்.

அந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் சிறிய தொகை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவது தொடா்பாக அளிக்கப்பட்ட வழிமுறைகளை நம்பி அவா், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 640 தொகை முதலீடு செய்துள்ளாா். அதற்குரிய கமிஷனமாக ரூ.37 ஆயிரம் தொகை திரும்பப் பெற்றுள்ளாா்.

ஆனால், லிங்க்கில் காண்பித்த மீதமுள்ள ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 640 தொகையை அவரால் திரும்பப் பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இது குறித்து சைபா் கிரைம் இணையதளம் மூலம் அவா் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.