2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அரசு மருத்துவமனை ஊழியா் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் அரசு மருத்துவமனை ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 ஜூன் 2024, 7:28 pm

Din

திருமணமாகாத விரக்தியில் அரசு மருத்துவமனை ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா், அரசமரபேட்டை, என்ஜினீயா் சுப்புராமன் முதலி தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (44). இவா் வேலூா் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா்.

வெங்கட்ராமனுக்கு தோஷம் இருப்பதால் திருமணம் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்படுகிறது. இதனால், 44 வயதாகியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வெங்கட்ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.