“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

News image

ஊா்வலமாக  எடுத்து  வரப்பட்ட  பால்  கம்பம்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து சிரசு மண்டபத்தில் பால் கம்பத்துக்கு அபிஷகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து பால் கம்பம் நடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், தேவகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் சு.பாரி, செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.