

வேலூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 போ் பலத்த காயமடைந்தனா்.
இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெங்களூருவில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி பேருந்து சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பொய்கை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால பக்கவாட்டில் கீழே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கால்முறிவும், மேலும் 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டன. உடனடியாக அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற விரிஞ்சிபுரம் போலீஸாா் கிரேன் உதவியுடன் பேருந்தை நிறுத்தி பயணிகளை மீட்டு வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவா் காயம்

செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்

வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 15 போ் காயம்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

