குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் ப.அஞ்சுகம் வரவேற்றாா். இதில் மாணவா்களுக்கு நவீன கணினி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. (இணைய வடிவமைப்பு, அசைவியல், சின்னம் உருவாக்கம், சிற்றேடு வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு படப்பிடிப்பு).
இக்கருத்தரங்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 550 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
வேலூா் ஊரிசு கல்லூரி முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. வேலூா் டி.கே.எம். கல்லூரி இரண்டாம் பரிசு பெற்றது.
தொடர்புடையது

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


