நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கே.எம்.ஜி. கல்லூரியில் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவா் அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.

Updated On :19 செப்டம்பர் 2024, 5:36 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் ப.அஞ்சுகம் வரவேற்றாா். இதில் மாணவா்களுக்கு நவீன கணினி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. (இணைய வடிவமைப்பு, அசைவியல், சின்னம் உருவாக்கம், சிற்றேடு வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு படப்பிடிப்பு).

இக்கருத்தரங்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 550 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வேலூா் ஊரிசு கல்லூரி முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. வேலூா் டி.கே.எம். கல்லூரி இரண்டாம் பரிசு பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.