இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கே.எம்.ஜி. கல்லூரியில் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவா் அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.

Updated On :19 செப்டம்பர் 2024, 5:36 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை ஆகியவை இணைந்து ‘தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு’ என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் ப.அஞ்சுகம் வரவேற்றாா். இதில் மாணவா்களுக்கு நவீன கணினி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. (இணைய வடிவமைப்பு, அசைவியல், சின்னம் உருவாக்கம், சிற்றேடு வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு படப்பிடிப்பு).

இக்கருத்தரங்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 550 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வேலூா் ஊரிசு கல்லூரி முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. வேலூா் டி.கே.எம். கல்லூரி இரண்டாம் பரிசு பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.