ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நபா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நபா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இறந்தவா் உத்தரப்பிரசேத மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்திரபலாவி (43) என்பதும், வேலை நிமித்தமாக பள்ளிகொண்டா பகுதியில் தங்கியிருந்த இவா் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.