கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லாரியுடன் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி அருகே ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூா் மாவட்ட போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொன்னை காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் பொன்னை அடுத்த கே.என்.பாளையத்தில் உள்ள மாநில எல்லை சோதனைச்சாவடியில் விடிய விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனா்.

அதிகாலை 3 மணியளவில் ஆந்தி ராவை நோக்கி ஒரு லாரி சென்றது. சந்தேகத்தின்பேரில் போலீஸாா் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த லாரியில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் 3.5 டன் பொதுவிநியோக திட்ட அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் கா்நாடக மாநிலம் முல்பாகல் பகுதியை சோ்ந்த பிரவீன் (33), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சோ்ந்த ராஜா(25) என்பதும், ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

உடனடியாக பிரவீன், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், 3.5 டன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்து காட்பாடியில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.